கவிதை
காட்சிகள் இரண்டு நாவிஷ் செந்தில்குமார்
இரு சக்கர வாகனத்தில்
பச்சை விளக்குக்கான
காத்திருப்பில்
நீலப்படம் ஒன்று...
காது கடிக்கும் இதழ்கள்
மார்பு சுமக்கும் தோள்
முன்னிடை கீழ்ப் பிடிக்கும் கைகள்...
வேண்டாம் இவர்கள்
காதல் மிச்சம்
சொன்னால்
விழுந்ததாய் உணர்வீர்
காக்கை எச்சம்.
*******************
சாலையோரப்
பெருமரமொன்றினருகில்
பின்னிருகால்கள் பரப்பி
ஏதுவாய் நின்றது
ஒரு நாய்
எம்பிப் புணர்ந்தது
இன்னொரு நாய்.
நாவிஷ் செந்தில்குமார் (navishsenthilkumar@gmail.com)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|