கட்டுரை
அதுவரைக்குமாவது
ஜெ.நம்பிராஜன்
ஆற்றுக்குளியலுடன் ஆசையாய்
அனுபவித்தாயிற்று பார்த்துப்பார்த்து
தொழில்நகரத்தில் கிடைக்காதவற்றை
ஊர்வாசத்தின் மிச்சமாய்
பயணப்பட்டன சில பூச்செடிகள்
இரயிலில் என்னுடன்
எல்லாவற்றையும் பிரிக்கையில்
இலவச இணைப்பாக வெளிப்பட்டது
செடிகளுக்கு நடுவே ஊர்ந்தபடி
இரயில் பூச்சி ஒன்று
பார்த்தறியாத பக்கத்து வீட்டு
குழந்தைகளிடம் காட்ட வேண்டும்
உயிரோடிருக்க வேண்டும்
அந்த பூச்சி
- ஜெ.நம்பிராஜன்(nambirajan.j@gmail.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|