Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

யசோதரா ஆனார்கள் தமிழ்பெண்கள்
நோர்வே நக்கீரா

பிணத்தைக்கண்டு பிணமாகிப்போன புத்தர்
வீட்டைவிட்டு
கொற்றத்தைத் துறந்து
கொண்டவளை மறந்து
ஒடினான் துறவியாய்
தெரியாத ஒன்றைத்தேடி.

சவத்தைக் கண்டு
புதிய பிரசவமானது அவர் ஆத்மா.

போதிமரத்தின் கீழ் புத்தரின் வாசம்
யசோதராவுக்கே அரண்மனையில் சிறைவாசம்.
ஆண் ஓடினால் ஞானம்
பெண்ணோடினாலோ பல வியாக்கியாணம்.

ஞானம் நிறைந்து
காலம் கடந்து
அரண்மனைக் கதவுகளை
மீண்டும் தட்டினார் புத்தர்
இன்முகத்துடன்
இளநகையுடன்
புன்முறுவல் பூத்த நரை திரைவிழுத்த யசோதராவிடம்
“என் பல்லொன்றைக் காணவில்லை கண்டாயோ” என்றார்

ஞானத்தில் பார்த்தவள்
“ இலங்கையிலே இருக்கென்றாள்”
மீண்டும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிய புத்தர்
இன்னும் திரும்பி வரவில்லை.
திரும்பி வரவேயில்லை.
காத்திருப்பு
கண்ணகிக்கி மட்டுமல்ல
யசோதராவுக்கும்தான்

ஈழத்துத்தமிழ் பெண்கள் போல்
கணவனின் தேகத்தைத் தேடினாள்
சிங்கள தேசமெங்கும்.

எந்தவித பொலிஸ் அறிக்கையுமின்றி
விகாரை எனும் கல்லறைக்குள்
புத்தர் புதைக்கப்படிருந்தார்.
சமாதி முன் எரிந்து
சாம்பலாகிக் கொண்டிருந்தது திரிபுடகம்

வழிமேல் விழிவைத்து இன்றும்
வானுலகில் காத்திருக்கிறாள் யசோதரா
காத்திருப்பு இன்றும் தொடர்கிறது
எங்கள் ஈழத்துத் தமிழ் பெண்களில் இருந்து
தமிழ்நாடு கரையோரப் பெண்களை வரை.

- நோர்வே நக்கீரா (Nackeera@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.