Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

முல்லை வனத்தினிலே!...
தொ. சூசைமிக்கேல்


Flowers park முல்லை வனத்தினிலே - வைகறையில்
         மொட்டு மலர்ந்ததடி!
கொள்ளை அழகினிலே - நெஞ்சை அது
         கோடி கவர்ந்ததடி!

காலைப் பொழுதினிலே - முல்லையெழில்
         கண்ணைப் பறிக்கையிலே
சோலை முழுக்கவுமே - புத்தம் புது
         சொர்க்கம் விளைந்ததடி!

வீசிடும் தென்றலிலே - நறுமணம்
         வீசிய முல்லைகளால்
நாசியும் காற்றுதனை - மணத்தொடு
         நன்கு முகர்ந்ததடி!

வண்டுகள் பல்வகையும் - வனப்புறு
         வண்ணத்துப் பூச்சிகளும்
கண்டு களித்தபடி - தேனை உண்டு
         காதல் புரியுதடி!

பள்ளிச் சிறுவரெலாம் - வந்து வந்து
         பார்த்து மகிழ்வது பார்!
மெல்லிய நல்லிதழைத் - தொட்டுத் தொட்டு
         மேனி சிலிர்ப்பது பார்!

மாதர் குலங்களெல்லாம் - மலர் கொய்து
         மாலை தொடுப்பது பார்!
வேதப் புரோகிதரும் - அர்ச்சனைக்கு
         வேண்டிப் பறிப்பது பார்!

போற்றுதமிழ்ப் புலவோர் - பொங்கிவரும்
         பூமணத் தாக்குதலால்,
சாற்றுகவி புனைந்து - கற்பனைக்குள்
         தாவிக் குதிப்பது பார்!

எத்திசையும் கவர்ந்தே - எவ்வுயிர்க்கும்
         இன்பம் பயப்பனவாய்
இத்தரையில் மலரும் - பூக்கள் புகழ்
         என்னென்(று) உரைப்பதடி!

நல்ல தலைவர்களும் - உலகிடை
         நற்றமிழ் வித்தகரும்
முல்லை இனத்தவரென்(று) - இயம்பிடல்
         முற்றிலும் உண்மையடி!

பூமியில் நல்லவர்கள் - முல்லைகளைப்
         போன்றவர் என்போமடி!
நாமிதை நன்குணர்ந்தால் - உலகெங்கும்
         நன்மை மணக்குமடி!

- தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.