Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

எங்கு சென்று நாம் அழுவதோ!
(ஓர் இந்தியத் தமிழனின் மனக்குறை)
தொ. சூசைமிக்கேல்


Mullai thivu தென்னிலங்கை ஒரு போர்க்களம்! - பிணத்
        தீனி கேட்கிறது சிங்களம்!
கண்ணிழந்ததோ பாரதம்? - இனி
        கருணை வேண்டுவது யாரிடம்?..

தமிழன் வாழுகிற இந்தியா - ஒரு
        சலனமற்ற வெறும் நந்தியா?
தமிழ்ப் பகைவரொடு பந்தியா? - இது
        தர்ம தேசத்து நீதியா?

குண்டு மழைபொழிந்து தீர்க்கிறான் - தமிழ்க்
        குழந்தைகளின் உயிரை மாய்க்கிறான்..
கண்டுகொண்டும் இவர் இருப்பதேன்? - அந்தக்
        காடையனை விட்டு வைப்பதேன்?

ஊடகங்களிடம் முறைக்கிறான் - தன(து)
        உயிர்க் கொலைகள்தமை மறைக்கிறான்..
கேடறிந்தும் இவர் பொறுப்பதேன்? - அந்தக்
        கிறுக்கனை நொறுக்க மறுப்பதேன்?

சாதி மதவெறியின் தாண்டவம் - இதைச்
        சகிக்குமா உலக மானுடம்?
போதி மரத்தடியின் புத்தனும் - இதைப்
        பொறுத்திருப்பனோ, ஒருகணம்?

அகதிதான் ஈழத் தமிழனோ? - அதை
        அனுமதிக்கிறவன் மனிதனோ?
தகுதியொன்று பறிபோகுமோ? - அதைத்
        தட்டிக் கேட்பதொரு பாவமோ?

எதிரி நாடுகளில் யாசகம் - இனி
        இலங்கை வாங்குவது ஆயுதம்
புதியதான சதி நாடகம் - இதைப்
        புரிந்து கொண்டதா, பாரதம்?

வங்க தேசம் நினைவிருக்குமா? - அது
        வடிவெடுத்த கதை மறக்குமா?
எங்களுக்கும் அது இல்லையா? - அட!
        என்ன நியாயமிது? சொல்லய்யா!..

ஈழம் தமிழர் நிலம் அல்லவா? - அதை
        இழந்திடல் அவலம் அல்லவா?
தோளில் சுமந்த குலம் அல்லவா? - எங்கள்
        தொப்பூழ்க் கொடி உறவு அல்லவா?

அமைதி என்பதொரு மாய்கையோ - பெரும்
        அழிவின் மீதுதான் வேட்கையோ?
எமது தமிழர் இனம் அழிவதோ? - இனி
        எங்கு சென்று நாம் அழுவதோ?...

- தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.