Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

ஈவ்டீசிங்
வே. மதிமாறன்

“ச்சீ..
பொம்பளைங்க
நிம்மதியா வெளியே
போயிட்டு வரமுடியுதா?
குறுக்க வந்த
ஆபாசமா பேசுறான்.
பின்னால வந்து
துணிய புடிச்சு இழுக்கிறான்.
கூட்டத்துல உரசுறான்
ஆம்பிளைக்கு
இதுதான் அழகுன்னு நினைப்புப் போல
ரொம்ப பொறுக்கித்தனமா போச்சு நாடு”

பெண்களுக்கு எதிரான
வன்கொடுமைகளைக் கண்டித்து
காலையில் பக்கத்து விட்டு
பாபு அம்மாவிடம்
ஆவேசப்பட்ட
அம்பிகா அத்தைதான்
மாலை வீட்டில்
டீ.வியின் முன்
பவ்யமாக அமர்ந்து
குகி. கூவமின்
ஆன்மீக அருளுரை
கேட்டுக் கொண்டிருந்தாள்

“என்ன பண்ணார் தெரியுமோ
நம்ம கிருஷ்ணர்,
பெண்கள் குளிச்சிண்டுருந்த
குளத்துக்குப் போய்
அவா துணியெல்லாம்
தூக்கிண்டு ஓடியாந்துட்டார்.

அதேபோல் நம்ம கந்தனும்
மாறுவேஷம் போட்டுண்டு
அவா அண்ணா
விநாயகர் உதவியோட
வள்ளியை
ஓட, ஓட
விரட்டி, விரட்டி
காதல் பண்ணார்.

நம்ம பகவான்களுக்கு
மானிட பெண்களோடு
விளையாடுறதுல தனி குஷி”

கேட்டுக் கொண்டிருந்த
மாதர் சங்க பொறுப்பாளர்
அம்பிகா அத்தை முகத்தில்
பக்தி கலந்த பூரிப்பிருந்தது.

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.