கவிதை
ஒருத்தி மதன்
ஒருத்தியுடனான
முடிவற்று நீளும்
வார்த்தைப் புணர்ச்சிகள்
என் மஞ்சள் இரவுகளின் மேல்
சந்தனத்தை அப்பிவிட்டன.
ஒருத்தியுடனான
கனவில் நிகழும்
துவம்சத் துளிர்ப்புகள்
பன்னீர் அகழியில்
முழுகச் செய்தன.
ஒருத்தியுடனான
அரை நிமிஷ ஸ்பரிசிப்புகள்
தாழம்பூச் சாற்றை
புனல் வைத்து
மூக்கில் ஊற்றின.
ஒருத்தியுடனாகாத
கலகக் கலவிகளோ
முத்துவெள்ளைத் திரவமான
விஷப்பெருக்கில்
உடல் புரண்டு ஊறச் செய்து
அடி வருடி காயச் செய்தன.
- மதன் (mathansri@gmail.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|