Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

ஹைக்கூ
மாறன்

மழைத்துளி விழுந்த
மண்ணில் எழுந்த
வாசம் நுகர்வதற்குள்
சிக்னல் விழுந்துவிட்டது
.
எந்தப் பேருந்திலும்
ஊனமுற்றவர்கள்
உட்கார்ந்து பார்த்ததில்லை
ஊனமுற்றோர்
இருக்கையில்
.
தண்ணீர் லாரி விபத்து
மக்கள் ஓடோடினர்
குடங்களுடன்
.
கரகாட்டம் முடிந்து
தூங்கப் போனோம்
ஆடியவளைத் தவிர
.
வீடு வந்தும் நினைவில்லை
வழியில் சந்தித்த
நண்பனின் பெயர்
.
சாவு வீட்டில்
நடனமாடியது
ஊதுவத்திப் புகை
.
நெரிசல் பேருந்தில்
திணறாமல் உலவும்
மல்லிகை வாசம்

- மாறன்

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com