Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

உள்ளே கொதிக்குதோர் உலைக்களம்
மானியூர் மைந்தன்

Vanni அன்னியதேசத்து அகதியாய்
தனிமையின் தாவாரத்தில்
உட்காரும் போதெல்லாம்
உறங்கிய உணர்வுகள்
உசும்பிவிடுகின்றன

செழுமையான கிராமத்தூளியிலே
கண்மலர்ந்த மழலைகள்நாம்
அந்த செம்மண்புழுதி
சந்தணமாய் உடல்தழுவ
கிளித்தட்டு ஆடியவர்
ஆயிரம் கதைசொல்லி
அன்னை சோறூட்ட
சிரித்துக்களித்து
உருசித்து மகிழ்ந்தவர்கள்

சிட்டுக்குருவியாய்
சிறகடித்துப் பறந்தஇனம்
பட்டுக்களைத்து இங்கு
பரிதவித்துப் ஏங்கிறதே

இரும்புப் பறவையிடும்
எச்சத்தில் என்இனம்
சிக்கிச்சிதைந்து
செங்குருதிச் சேற்றில்
செத்துவீழ்கிறதே

பூமிக்குவந்து பத்தேநாள் ஆன
பிஞ்சு குழந்தையும்
நெஞ்சுபிளந்து பஞ்சாகிப்போகிறதே
விட்டில்ப+ச்சிகளாய்
பட்டினியோடு தெருவோடும்
மரநிழலோடும் அச்சத்தில்
அந்தரித்துக்கிடக்கிறதே என் இனம்

பேனாவைத்தூக்கியவர்
காணாமல் போகையிலே
உணர்வுகளின் உண்மைகளை
உரக்கச் சொல்லச்சக்தியில்லை
உறவுகள் சருகாகி
உதிர்ந்து போகையிலே
உறங்கிக் கிடப்பது
உத்தமம் ஆகுமோ

இதுவெல்லாம்
விதிவிட்ட வழியென்று
மதிகெட்டுப்பேசுவதோ
எம் உள்ளக்கிடக்கையை
ஊர்கேட்கச் சொல்கின்றோம்
செத்துவிட்ட உலகச்
செவிகட்குக் கேட்குமா?
இந்த மரணஓலம்!

- மானியூர் மைந்தன் (navaas06@yahoo.de)

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.