Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

வனத்தின் தனிமரம்
குட்டி செல்வன்

rain அட‌ர்ந்து பொழிகின்ற‌து
சில‌ தின‌ங்க‌ளாய்
பருவம் தப்பிய இம்மழை

வ‌லுவான‌ காற்றுட‌ன்
வ‌ரும் அத‌ன் நோக்க‌ம் அறிய‌யிய‌லாத‌து
வரவேற்க விரும்பாதது

ம‌ழையாலும் காற்றாலும்
பிடிப்பினை ஏதுமற்ற என் கிளைக‌ள்
ஒடிந்துவிழாமல் இருக்க
தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றேன்

இலைகளற்று
நிர்வாணமாக்கபட்ட பிறகு
கவலை கொள்ள ஒன்றுமில்லைதான் எனினும்
மனதை கணக்கச்செய்கின்றன
தொடர் போராட்டத்திற்கிடையே
கரைந்து வழியும்‌ மழையுடனான
எனது பழைய நெருக்கங்க‌ள்

ஏனிந்த மாற்றமென வியப்பளிக்கையில்
மேலும் அதி தீவிர‌மாகி
எனை முற்றும் சாய்க்க‌ முய‌ல்கின்ற‌து
அத‌ன் கோர‌ முகங்காட்டி

என் சுய‌ங்க‌ள் வ‌ழியே
எனது கிளைகளை விரிய‌ச் செய்கின்றேன் இவ்வெளியெங்கும்
வேர்களை பரவச் செய்கின்றேன் மிக‌ ஆழமாக

இப்பொழுது
சமாளிக்கக் கற்றுகொண்டிருக்கின்றேன்
இம்ம‌ழையை

அரவணைப்பதாயினும்
அடித்து வீழ்த்துவதாயினும்

- குட்டி செல்வன் (kutty.selvan@live.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.