Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

பறிக்காமல் விட்ட அரளிப்பூ விதை
குமரேஷ் பொறையார்

Sad Man உன் விரல்களாய் என் கன்னங்களை
வருடுகின்றன என் வீட்டு மாமரக்கொழுந்துகள்
உன் இதழ்களாய் பூத்து சிரிக்கின்றன
என் வீட்டு செம்பருத்திகள்
குளித்து முடித்து ஈரம் சொட்டும் உன்
கூந்தலாய்ப் பொழிகிறது கார்முகில்
மேகம் கலைந்த வானத்தில்
உன் முகமாய் சிரிக்கிறது நிலா
பறிக்காமல் விட்ட அரளிப் பூ விதையாய்
கசக்கிறது உன் பிரிவு

- குமரேஷ் பொறையார் (kumersh79@gmail.com)

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
thamilanban
2009-07-16 05:21:00
veeruthamil@rediffmail.com



ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!
கீற்று இணைய இதழ் கவிதைகள் பகுதிக்காக
இந்த படைப்பை அனுப்பி உள்ளேன்.
நன்றி!

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

பிரபாகரா நீ
இருக்கிறாயா
இறந்து விட்டாயா...? என்
இனத்தித்ின்
முகவரியானவன் நீ - உன்
இருப்பிடத்தின் முகவரியை
தொலைத்தததுவிட்டு நாங்கள்...!

முகவரி தந்தவனின்
முகவரியை தொலைத்தது
எங்கள் குற்றம்தான்...

நீ
இருக்க வேண்டும் என்பது - என்
இனத்தின் உணர்ச்சி
இறந்துவிட்டால் - என் தேசத்திற்கு
இன்னும் மகிழ்ச்சி - என்
இனத்தின் மிச்ச சொச்ச
நாடிகள் அட்ககப்படும் வரை
இலங்கையின் இறையன்ண்மை பேசும்
தேவை உள்ளது எங்களுக்கு...

இலங்கையின் இறையான்மையில் தான் - எங்கள்
இந்தியாவே வாழ்ந்து கொண்டிருக்கிறது
தெரியுமா உனக்கு...?

மனிதாபிமானம்
மாண்டு போகலாம்
உயிர்கள் உருக்குலைந்து போகலாம்
இராணுவ துப்பாக்கிகள்
சுகம் தேடி
இறந்த எம் பெண்களின்
கருக்குழியில் கூட
வெடி மருந்தின் வெம்மையை
தணித்துக்கொள்ளலாம்...

பார்த்துக்கொண்டிருப்போம்
பாதுகாத்துக் கொண்டிருப்போம் - ஆனால்
இறையான்மை என்ற
ஐந்து எழுத்தில்
ஒரு எழுத்துக்கு
பங்கம் வந்தாலும் - எங்களால்
பார்த்துக் கொண்டிருக்க முடியாது

உடனே
எங்கள் தேசத்து - இரண்டு
வள்லூறுகள்
வான் வழியே பரந்து செல்லும்
[இராமர் பாலம் இருந்திருந்தால் அடிக்கடி
யாருக்கும் தெரியாமல் நடந்தே சென்று வருவார்கள்]

'' உயிர்கள் கொல்லப்படலாம்
மனிதாபிமானம் மாண்டு போகலாம்
இனம் அழிக்கப்படலாம்
இறையான்மை காத்தல் மாண்பு '' - எங்கள்
அறிவு ஜீவிகள்
ஆலோசனை தந்து விட்டு - தந்தததை
உண்டு விட்டு
பல் இளீத்து
படம் எடுத்துக்கொண்டு - இங்கு வந்து
பட பட க்க
பேட்டி அளிப்பார்கள்
'' அப்பாவி உயிர்கள் காக்கப்படும்
ராஜபக்கஷே உததிரவாதம் '' - எங்கள்
நரைத்த மயிர்கள் கூட
நம்ப மறுக்கும்......

'' என் ஐயனே
அப்பனே
சிவ சிவ சங்கரா
நாராயணா
உனக்கே வெளிச்சம்....! '' என்று
கடவுள் நம்பிக்கையாளர்கள்
மனத்திற்குள் கதைத்துகொள்வார்கள்

இறைவா
ஆக்கலும் காத்தலும் அழித்துதலும்
உன் வேலை என்றார்கள்.....
உன் பெயரில்
இங்கே எமனின்
தூதுவர்களாய்
செம்மையாய் பணி
செய்து கொண்டிருக்கிறார்கள்.....

நாராயணன் பெயர் சொல்லும்
நாரதர் கலகம்
நன்மையில் முடியும் என்பார்கள் - ஆம்
நாராயணனுக்கும் அவன்
கூடாரத்துக்கும்......

அண்மையில்
முடிந்ததெல்லாம்
உண்மையில்
முடிந்ததல்ல.....

முகவரி தந்தவனின்
முகம் என்றும் மறையாது - அவன் மீண்டும்
முகம் காட்டாவிட்டாலும்
இனம் காக்க
இன்னொரு
' இனம் ' புறப்படும்.............
வீ . தமிழன்பன்
தில்லையாடி

முகவரி : veeruthamil@rediffmail.com
வீ . தமிழன்பன்,
2-11 ஏ, உயர்நிலைப்பள்ளி சாலை,
தில்லையடி அஞ்சல்,
நாகப்பட்டினம் மாவட்டம்.
609310.


வீ.தமிழன்பன்
2009-07-17 03:56:00
veeruthamil@rediffmail.com

பறிக்காமல் விட்ட அரளிப்பூ கவிதை
சொல்லாமல் விட்ட உண்மை எண்ணங்களின்
துயரத்தின் மிச்சம்...

நிறைவேறாத நியாயமான ஆசைகளின்
அடுத்த நிலை துயரம் அது
அரளீ பூ வித்தையாக கசக்கிறது...

துயரத்தை வெளிப்படுத்தும்
அழகான கவிதை
தேனாக இனிக்கிறது...

துன்பத்தின் வெளிப்பாட்டிலும்
எத்தனை அழகு...!

தொடர்ந்து எழுதுங்கள்
உங்கள் வெற்றியின்
துன்பத்தை...

வீ.தமிழன்பன்
தில்லையாடி

rajhkumar-jaffna
2009-07-17 09:53:00
raavan@hotmail.fr

thamilanbanukku vaazhththukkalum,nanrikalum...ungal unarvin vekaththukku intha varikal pothavillai....thodarnthu kathaiyungo...!

Nehruthas
2009-10-20 05:28:00
Nehruthasrmd@yahoo.com

, நீ
நடந்து வந்த பாதைக்கு முத்தமிட்டேன் ,, அட கிறுக்கன் என்றது உலகம் நான் முத்தமிட்டது காலடி சுவடுகளுக்கு அல்ல காதல் சுவடுக்கேன்று எந்தக் கிறுக்கனுக்கும் தெரியாது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Abineythri
2009-12-08 04:42:00
Abinesub.Mani@gmail.com

thudika mattun therintha
en idhayathirku
thavikavum
kathu koduthathu
UN ANBU..........



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP