Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

ஒரு வேண்டுதல்....
கவிதா நோர்வே

Children “மண்ணை உண்ட கண்ணனாம்”
என்று ஆடிப்பாடியே
தம் கலைவாழ்வை முடித்துக்கொண்டனரே
அவர்களுக்காகவாவது
கண்ணா....
தவழ்ந்தேனும் போய்
வன்னி மண்ணில்
மண் உண்டு
வாழ்தல் பற்றி
சொல்லிக் கொடேன்

அப்படியே
உன் மைத்துனன்
சிவனிடம் போய்
இடுகாடுகளில் ஆடிப்பாடி
வாழ்தல் பற்றி
என் மக்களுக்கும்
எடுத்துரைக்கச் சொல்லு

எங்கே யேசு?
உயிர்த்தெழும் கலைபற்றி
வெளியிடாத குறிப்புகளை
என்னதான் செய்தான்
கேள்..

புத்தனிடம்
குருதிக்காட்டிலும்
மரத்தடியில்
குத்துக்கல்லாய் இருப்பது பற்றி
அவன் முகம் கொடுத்தால்
கேட்டு வா

முகமதுவும், அல்லாவும்
மூடிக்கொண்டு போயிருப்பர்
பள்ளி அரங்குகளில்
பர்தா போட்டும் படுத்திருப்பர்

உங்களைப் பொருத்தவரை
கலிகாலம் வரவில்லை
தொந்தரவுக்கு மன்னிக்கவும்
ஆண்டவரே!

கைகட்டிச் சிரிப்போடும்
செல்வச் செழிப்போடும்
பூவும் புஸ்பமுமாய்
குந்தியிருங்கள்
குத்தவைச்சு.

சில்லறைப் பயல்களா...

- கவிதா நோர்வே (kavithai1@hotmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.