கவிதை
வாழ்க்கை கவிநயா
அலையேயில்லாத கடலின் பாவனையில்
அடுத்த புயலுக்குக் காத்திருக்கிறது
மனசு.
நினைவுகள் ஓரிடமாய்
நங்கூரம் பாய்ச்சி யிருக்க
கனவுகள் வானந் தேடி
தேசாந்திரம் போயிருக்கின்றன
நிஜங்களை விழுங்க முடியாமல்
திணறும் சுவாசத்துடன்
நீலம் பாரிக்கத் தயாராயிருக்கிறது
உயிர்.
ஆழத்தில் அழுந்திக் கிடக்கின்றன, முத்துகள்
முத்துக் குளிக்க ஆளின்றி....
- கவிநயா (mekavinaya@gmail.com)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|