Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

ocean
வாழ்க்கை
கவிநயா

அலையேயில்லாத கடலின் பாவனையில்
அடுத்த புயலுக்குக் காத்திருக்கிறது
மனசு.

நினைவுகள் ஓரிடமாய்
நங்கூரம் பாய்ச்சி யிருக்க
கனவுகள் வானந் தேடி
தேசாந்திரம் போயிருக்கின்றன

நிஜங்களை விழுங்க முடியாமல்
திணறும் சுவாசத்துடன்
நீலம் பாரிக்கத் தயாராயிருக்கிறது
உயிர்.

ஆழத்தில் அழுந்திக் கிடக்கின்றன, முத்துகள்
முத்துக் குளிக்க ஆளின்றி....

- கவிநயா (mekavinaya@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.