Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

குங்குமப்பூ
சி.கருணாகரசு

ஏழெட்டு திங்களுக்கு
பிந்தைய நிகழ்வுதான் என்றாலும்,
எழுதி வைத்திருந்தேன்
இருபாலினத்திலும்
உனக்கான பெயர்களை

உன்வரவு
உறுதியானதிலிருந்து
பிரபஞ்சம் பெரிதாய் இல்லை
என் மகிழ்ச்சியை விட.

உன் மென்மையை உணர
உன் அசைவுகளை ரசிக்க
உன் மொழியில் லயிக்க
காத்திருந்தேன் கனவுகளோடு.

பத்தாம் மாதம்
என் வானமாகமல்
பத்துவார
வானவில் ஆனதேன்?
வந்துக் கொண்டே இருக்கும் - உன்
வரவுக்கான
வாழ்த்துகளை என்ன செய்ய?

இப்பொழுதும்,
பிரபஞ்சம் பெரிதாய் இல்லை.
என் வலியை விட.

கொட்டிக்கிடக்கிறது
குங்குமப்பூ

சிரமப்பட்டுத்தான்
சிரிக்கிறேன் மற்றவர்முன்

- சி.கருணாகரசு (karunasingai@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.