Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

அந்தபுரத்துக் காதல் கதை
கெ.கார்த்திக் சுப்புராஜ்

ஒருநாளில் பலமுறை
அவனுக்கு காதல்
வரும்!- என்போன்றவள் மீது!

அவனுக்கு காதல்வரும்
தருணங்களில், அவன் கை
வசப்படுவாள் - எங்களுள் ஒருத்தி!

அந்த நாள் அந்த நோடி
அவனது காதலுக்கு
கைவசப்பட்டவள் - நான்!

பிறந்ததில் இருந்தே
பெட்டிக்குள் அடைக்காத்ததுபோல்
வளர்ந்தவள்- நான்!

இருப்பிடம்விட்டு வந்ததும்
இல்லை, சென்றவர்களின்
அனுபவம் கேட்டதும் இல்லை!

வெட்கமும் பயமுமாயிருந்த
என்னை சட்டென
தொட்டது, அவன்விரல்!


அடுத்த நோடியில் தொலைந்தது
வெட்கம். அனலாய்
கொதித்தது- என்தேகம்!


அவன்விரல் என்மீதிருந்த
நேரமெல்லாம் உடலில்
பரவியது காதல் தீ !

அந்தவேட்கையில் பற்றி,
நானே எ¡¢வதை
போலொரு உணர்வு!

என்னைபோல் எ¡¢யும்
காதலோ, உணர்ச்சியோ,
துளியுமில்லை அவனிடம்!

அவனுக்கு நான் எத்தனாவது
காதலியோ?. ஒருவேளை
இருந்திருக்கலாம் முதல்காதலியுடன்!

அவன்பு¡¢வது காதலோ,
கடமையோ எனக்கு அவனே
முதல்காதலன் கடைசிவரை!

அலட்சியமாய் சுவாசித்தான்
என்னை, - சுவாசிக்கப்பட்டு
சுவாசித்தேன் அவன்காதலை!

அவன்விரல்கள் எப்போதும்
என்மீதே இருந்தது.
அவனிதழ்கள் அவ்வப்போது!

இதழ்பட்ட நேரங்களில்,என்
அச்சம் மடம் நானமெல்லாம்,
பொறுக்காமல் புகையானது!

இப்படி காதலில் முழ்கிப்பின்
மீண்டபோது மொத்தமாய்
கரைந்திருந்தது என்தேகம்!

அதுவரை அணையாமலிருந்த
காதலை,ஏனோ தொ¢யவில்லை
சட்டென்று அணைத்துவிட்டான்!

அனைத்தது மட்டுமில்லை
அதன்பின் அலட்சியமாய்
விட்டுவிட்டு விடைபெற்றான்!

மாடத்தில் தோழிகளுடன்
மகிழ்ச்சியாய் பொழுதை
கழித்திருந்த என்னை!

அவன் சில நொடி காதலுக்கு
இரையாக்கி பின் என்னை
குப்பையாக்கி சென்றுவிட்டான்!

அதுவரை புனிதமாயிருந்த
காதல், மாறியது
வலியாய் ரணமாய்!

அவனை போன்றோ¡¢ன்
சைக்கிணங்கி அழிவதற்காகவே
படைக்கப்பட்டது எங்கள் இனம்!

அவன் மீண்டும் வருவான்
வேறொருவளை தோடுவான்,
பின்னென்னருகே வீசிடுவான்!

எங்கள்தேகம் அழித்து
வளர்த்த காதலின் புனிதத்தை
என்றாவதொரு நாள், உணர்வான்!

காதல் பு¡¢ந்து
கைவிட்டவன் அந்த காதலாலே
ஒரு நாள் அழிவான்!

அந்த நாள் அவன்தேகமும்
அனலாய் கொதிக்கும்,
எ¡¢யும், புகையும்!

அப்போது அவன் சொல்வான்,
"நான் அவளை
காதலிருத்திருக்க கூடாது" - என்று

இப்படிக்கு,
சற்றுமுன் அடித்து,
அணைத்து, வீசப்பட்ட
ஒரு சிகரெட் !!!!!!!!

- கெ.கார்த்திக் சுப்புராஜ் (karthiksubbaraj@yahoo.co.in)



இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.