|
கவிதை
என் திருமண நினைவுகள் கார்த்திக் பிரபு
1.
வீடியோ வெளிச்சம் கண்கள் கூசியது
குனிந்து நிமிர்ந்து உடல் வலித்தது
செயற்கை சிரிப்பில் வரவேற்றது
கைகள் நடுங்க தாலி கட்டியது
வியர்வை மழையில் வீற்றிருந்தது
எல்லாம் நினைவுக்கு வருகிறது
நண்பனை வாழ்த்த மணமேடையில் ஏறிய போது..
-நான்
2.
கதவின் தாழ்ப்பாள் சரிசெய்தது
இரட்டை அர்த்த ஜோக்குகள்
பால் பழம் இனிப்புகள்
ரூம் ஸ்ப்ரே இத்யாதி இத்யாதி
அலமாரி, துணிக் கூடை
பாத்திரங்களில் மறைத்து வைக்கப்
பட்ட செல்போன்கள்
இவையெல்லாம் நியாபத்திற்கு
வந்து தொலைக்கிறது
தோழியை முதலிரவு அறைக்கு
அனுப்பும் போது..
-அவள்
- கார்த்திக் பிரபு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|