|
கட்டுரை
வளர்த்தீயடி கற்பகம் இளங்கோவன்
நீ அழகியா...
சீறிப் பாய்ந்த
அலாகலம் தோய்ந்த அம்பு
நீ அழகிய
அலாகலம் தோய்ந்த அம்பு!
பிரிய தோழியா..
நேரிய நாசி
நெஞ்சினைக் கீற
நீளக் கண்கள்
நரம்புகள் கொய்யும்!
உதிரத் தாக
நயவஞ்சகமே
பிரியத்துக்குரிய
எதிரியடீ!
நீ பிரியத்துக்குரிய
எதிரியடீ!
நீ தென்றலா!
மெளனப்புயல்கள்
சொற் சூறாவளிகள்
சுழல்ஜவலைகள்
எத்தனை ஆயுதங் கொண்டாய்
சுடும் தீயடீ
கண்ணே நீ
என்னுயிர் வளர்த்தீயடீ!
- கற்பகம் இளங்கோவன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|