Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

அந்த நாட்கள்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Tree சலனமற்றுக் கிடக்கும் குட்டை நீர்களில்
காற்றிடறிய வட்ட குமிழ்களுக்கிடையே
கரைந்தோடுகின்றன அந்த நாட்கள்
இலையுதிர் காலங்கழிந்து மரங்களீன்ற
பச்சிளம் பசுமிலைகளாய்
நிறை வயிறில் நின்று நிதானித்து எட்டிடும்
மழைக் காலத்து மாலை மேகங்களாய்
பல காலன் நீரை பதுசாய் அள்ளியேந்தி
கரை தேடி கொட்டிச் செல்லும்
ஊர் தூங்கிய இரவு நேரத்தலைகளாய்
ரம்மியமும் சுவையுங் கூடியதது
ஆடியடங்கியொடுங்கத் தேடும் ஊத இரவுகளில்
மெல்லிய படர் பனிகளினூடே
கம்மாயும் கட்டபொம்மன் கதையுமாய்
களைத்துத் தீர்த்த கனிய காலமது
எச்சிலூறும் எள்ளு ரொட்டிக்கும்
எகிறிச் செல்லும் வண்ணாத்திக்கும்
உயிர் தொலைத்த உன்னத மாலையது
பெருகிக் கிடக்கும் சோளங்காடுகளில்
கீறிக் கிழிக்கும் கருவேலந்தோப்புகளில்
அறிவியலும் கணக்கும் மறந்து
விவசாயமும் விலங்கியலுமறிந்த
விடுமுறை காலப் படலமது
சட்டியில் கொதிக்கும் அயிரைக்கும்
வட்டியில் ஓய்ந்த வள்ளியப்பனுக்கும்
பாவப்பட்ட பத்தாம்பசலிப் பருவமது
கலங்கிய குட்டை தெளிந்து தேர்கையில்
தெள்ளிய மனமிருக்கும் கலங்கியபடி!
உருண்டு திரண்ட ஊளைச் சதையும்
கிறுக்கியலைந்த சில கவிதைகளுமன்றி
பெரிதாய் மிஞ்சியதெதுவென்று
மெனக்கெட்டமர்ந்து யோசித்தபடி.

-எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ junaidhasani@gmail.com

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.