Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

இரயில் சிநேகம்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Train Friends புத்தக இரவல் கோரல்களிலும்
அசௌகரியச் சூழ்நிலைச் சீர்கேட்டின் நொந்தல்களிலும்
முளையிட்டுத் தொடங்கும் இரயில் சிநேகம்

அடுத்து பெயர் பரிமாற்றங்கள்
எங்கே எதற்காய் எப்பொழுதென்ற
ஒவ்வொருவருக்கான பயணப் பிரயாசைகள்
அப்படியா! அங்கேயா!
எதிர்பட்டவரின் தனக்குண்டான ஏரியாத் தொடர்புகளை
இழுத்து வளைத்து நுழைத்து
பேச்சிழுக்கும் கைங்கர்யங்கள்

பின் இருந்ததை விடுத்து இல்லாததை எடுக்கும்
சிறிய மற்றும் பெரிய தத்தமது உண்டி மாற்றங்கள்

வழிப்படும் வழிகளையும்
அப்பகுதி மொழிகளையும்
அவரவர் ஆய்வுகளில் நிறைதல்களும் குறைதல்களும்

நிறைந்து கிடக்கும் உறவுக் குவியல்களில்
புதியதோர் மாமா அத்தையை
மழலைக்குச் சொல்லிப் பின் கேட்டு
மகிழ்ச்சியில் மனங்கள் குதூகலிட்டு
கண்டிப்பாய் தன்னில்லம் வர வேண்டுமென்றும்
இயல்கையில் தானும் வருவதாகவும்
உறுதி மொழிகள் கூடிய முகவரிகள் மாற்றி
என்னதான் உறவுக் கீதமிசைத்தாலும்
சலவையில் சிக்குண்டுச் சீரழிந்த
அச்சிதிலத் துண்டுச்சிட்டு காண நேர்கையில்
நெற்றி சுளிக்கவே செய்கிறேன் யாரென்று!

-எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ junaidhasani@gmail.com

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.