Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை
நிற்காமல் நின்றுகொண்டு...
அத்திவெட்டி ஜோதிபாரதி


பள்ளி விட்டதும்
எங்கும் நிற்காமல்
வீட்டுக்கு வந்துவிடு
அம்மா சொன்னது
மனதில் ஒலித்தது
காத்திருந்தேன் பேருந்துக்காக

இருட்டியதும் வந்தது
பேருந்து இறுமாப்புடன்

இடம் கிடைக்குமா என்ற
ஏக்கத்துடன் படியில்
உந்தி ஏறியதும்
நிற்காமல் பறந்தனர்
நடத்துனரும் ஓட்டுனரும்

மதியம் உண்ட களைப்பில்
மயங்கிப்போய் நான்
இருக்கையில் இருக்க
இடமில்லாமல்
நின்று கொண்டே விழுந்தேன்
தூக்கம் சொக்கியதும்

இடம் வந்ததும்
இறங்கிக்கொண்டேன்
எதுவுமே தெரியாத இருட்டு
இருந்தாலும் கண்டேன்
தெரியாத தெருவும்
எரியாத விளக்கும்
அதற்குத்தான்
தெருவிளக்கென்று பேரோ?
கும்மிருட்டில் காத்திருந்த
சிற்றொளிக் கைவிளக்கு
தம்பி என்று தழுவிக்கொண்டது
என் தாய்.

- அத்திவெட்டி ஜோதிபாரதி(jothibharathi@yahoo.com )

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.