Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

மலர்கள் கீழே விழுந்ததை எப்போது அறிந்திருப்பாள்?
ம.ஜோசப்

பேருந்தில் பணிக்கும் போது
யாரோ ஒரு பெண்
தவற விட்டிருந்த
ரோஜா, மல்லிகைச் சரம் மற்றும்
கூந்தலூசி (hair pin)
காலடியில் பட்டது.

தனக்கு அழகைக் கொடுக்கும்,
வாசத்தைக் கொடுக்கும், என
அவள் நம்பிய, மலர்கள்
கீழே விழுந்ததை எப்போது அறிந்திருப்பாள்?

தனது காதலனுக்காக அவள்
அதனைச் சூடியிருக்கலாம்.
அப்பூக்கள் குறித்தும்,
அவை பிரத்யேகமாய் அவளுக்குத் தரும்
அழகு குறித்தும்
அவன் பேசுவதை கேட்கவிருந்த
அவளின் ஆசை வாடிப் போய்க் கிடந்தது.

கணவனுக்காக அதனைச் சூடியவளாகக் கூட இருக்கலாம்.

அவள், அவளுக்காகவேக் கூட,
ஒரு வேளை, சூடியிருக்கக் கூடும்.

எப்படி, அதனைத் தவற விட்டிருக்கமுடியும்?
தீவிரமாக, ஏதேனும், அவள் சிந்தனையை
ஆக்கிரமித்திருக்கலாம்.

அப்பூக்களை தூக்கியெறிய மனமின்றி
முகந் தெரியாத, அப்பெண்னைக் குறித்து
ஏன் அதிகம் யோசிக்கின்றேன்?


- ம.ஜோசப் ([email protected])



இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com