கவிதை
அந்தரங்கம் செல்வராஜ் ஜெகதீசன்
இருவர் பேசிக்கொண்டிருந்த
இடத்தருகே
எதேச்சையாய் போய் நின்றேன்.
அப்படியே பேச்சு நின்று
அமல்படுத்தப்பட்டது அமைதி.
இன்னொருவனுக்கு
அனுமதியில்லாத
இருவரின் அந்தரங்கத்தின்
இடையே புகுந்ததறிந்து
வெறுமே சிரித்துவைத்தேன்
வேறெதுவும் தோன்றாமல்.
அவனவன் பாடு
கண்டு கொள்ளாமல்
இருந்திடல் கூடும்
சிலருக்கு.
கண்டு கொண்டாலும்
கைவசப்படுவதில்லை
சிலருக்கு.
கண்டதையும் கொள்வதிலும்
உண்டு
கணிசமான சிக்கல்கள்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (SJEGADHE@tebodinme.ae)
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|