கவிதை
எழுதுதல் செல்வராஜ் ஜெகதீசன்
யா௫ம் எழுதாத ஒன்றை
நான் எழுதப் போவதில்லை.
யா௫ம் எழுதமுடியாத ஒன்றையும்
நான் எழுதிவிடப் போவதுமில்லை.
ஆயினும்
எழுதித்தான் தீரவேண்டியி௫க்கிறது.
எவ௫க்காக இல்லையென்றாலும்
எனக்காகவேனும்.
இருப்பு
எப்படி இருக்கிறாய் என்றாய்.
அப்படியேதான் இருக்கிறேன்
என்றேன்.
இப்படி உன் விழிகள் விரிய
அப்படியே இருத்தலென்பது
அத்தனை சிரமமா என்ன?
இயல்பு
என்னாயிற்று என்றேன்.
எதுவுமில்லை என்றாய்.
பின் எதையும்
கேட்கவில்லை நான்.
இயல்பின்றி போவதில்
சம்மதமில்லை எனக்கும்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (SJEGADHE@tebodinme.ae)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|