Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

கவலை
ஜெயபாஸ்கரன்

நீண்ட நேரம் அமர்ந்து
சொல்லிவிட்டு வந்தேன்
என் கவலைகளை
அவனிடம்

sad man என் கவலைகள் குறித்து
அவன் என்ன நினைக்கிறான்
என்பதே என்னுடைய
இப்போதைய கவலையாக
இருக்கிறது.

நிதானமாகத் தலையசைத்து
என் கவலைகளைக் கேட்டு
உள்ளூர அவன்
மகிழ்ந்தான் என்பதற்கும்
அப்படியில்லை என்பதற்கும்
ஆதாரமற்றுத் தவிக்கிறேன்
நான்.

என் கவலைகள் குறித்து
கவலைப்படாத ஒருவனிடம்
சொல்லியிருக்கக் கூடாதுதான்
என் கவலைகளை.

தனது கவலைகளைப் பிறரிடம்
சொல்லிக் கொள்ளாமலிருப்பதைத் தவிர
வேறென்ன தகுதியிருக்கிறது
அவனுக்கு என் கவலைகளைக் கேட்க?

அநியாயமாக ஒருவனை
நீதிபதியாக்கிவிட்ட
அவமானம் குடைகிறது
என்னை.

தீர்வு காணத் தெரியாதவர்கள்
தீர்ப்பு கோரிப் புலம்புவார்களோ
ஒரு வேளை?


- ஜெயபாஸ்கரன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும் 
நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com