Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

இனிமை
ஜெயபாஸ்கரன்


man மொட்டை மாடியின் இருளில்
தனித்து அமர்ந்திருப்பது போல்
காணப்பட்டாலும்
தனியாக இருப்பதில்லை நான்.

என்னைச் சூழ்ந்து நின்று
கேள்விமேல்
கேள்வி கேட்கிறார்கள்
கடன்காரர்கள்
கேட்ட கேள்விகளையே
கேட்கிறார்கள்
கலை இலக்கியவாதிகள்.

விவாதிக்கவும்,
உரையாடல்களுக்கு
ஒத்திகை பார்க்கவும்
உகந்ததாக இருக்கிறது
இரவு நேர மொட்டை மாடியில்
நான் மேற்கொள்ளூம் தனிமை.

விதம் விதமான
மனிதர்களைச் சுமந்த
தனி ஆளாகப் படியேறி
மொட்டை மாடிக்கு வந்து
அமர்ந்திருக்கிறேன் நான்

இதையெல்லாம் கண்ணுறாமல்
என்ன சார்
தனிமையில் இனிமையா?
என்கிறான்,
என்னைப் போலவே
பலரைச் சுமந்து கொண்டு
படியேறி
மொட்டை மாடிக்கு வந்த
பக்கத்து வீட்டுக்காரன்.

- ஜெயபாஸ்கரன் (jayabaskaran_1960@rediffmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.