கவிதை
முகமூடிகளில் தெரியும் முகங்கள் இப்னு ஹம்துன்
சூழ்ந்திருந்த தனிமையில்
சுகமுணர்ந்த மனநிலையில்
மெல்லக் கழற்றினேன்
முகமூடி தன்னை!
அதன்மேல் தான்
எத்தனையெத்தனை
அபிஷேகங்கள்
போலிப்பெருமையின்
பாலாபிஷேகம்
புகழ்மொழிகளின்
பன்னீராபிஷேகம்
கூடவே
இச்சையின் எச்சிலும்
இயல்பின் மிச்சமும்.
வியந்துபார்த்தன கண்கள்
நாவுக்கோ நாணம்
அதன் நர்த்தனம்
காணக்கிடைக்கலாம்
இன்னொரு முகமூடி மீது!
- இப்னு ஹம்துன் (fakhrudeen.h@gmail.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|