Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

மண் வாச(க)ம்
இப்னு ஹம்துன்

Soil காலங் காலமாய் அது-
காதலைப் போலிருக்கிறது.
ஆதாரமாக!

சோற்றில் மண்ணைப் போடுபவனும்
சில பொழுது
மனம் திறப்பதுண்டு:
"மண் தான் சோறு போடுகிறது".

நிறையவே இருக்கின்றன
நறுமணத் திரவியங்கள்.
மனம் பூசிக்கொள்வதோ
மண் வாசனையைத் தான்.

மலர்ப்புன்னகை மர்மத்துடன்
மரம்
மவுனமாய் தலையாட்டிநிற்க..
மனிதன் சொல்லிக்கொள்கிறான்
'மண்ணின் மைந்தன் நான்!'

இருந்தும்........

'மண்ணாய்ப் போ...'வதை
வசவாகத் தான்
வைத்திருக்கிறான்.

- இப்னு ஹம்துன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com