Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

நானும் காதலும் – 5
கோகுலன்

Lovers நீ வரைந்த கோலத்தின்
வண்ண மயில்கள் அகவி விடியுமென் காலையில்
பனித்த கூந்தலுடன் தேனீர் கொணர்வாய்
முந்தைய இரவின் மீந்த காதலை இழுத்தணைக்க
மாவிளந்தளிரின் பெயர் சூட்டப்பெறாத
வண்ணத்தினாலான உன் வெட்கம்
காதோரச் சுருள்முடியில் நனைந்து நிற்கும்
பொய்க்கோபம் சிணுங்கி
மார்பில் கைவைத்துத் தள்ளுவதாய் பாவித்தும்
சுற்றிய கரங்களைத் தாண்டாது நிற்குமுனை
மீண்டுமாய்க் குளிக்க வைக்கிற பகற்பொழுதுகள்
சொல்லப்போனால் வெட்கமற்றவையே

முன்னறையில் காய்வெட்டும் அம்மாவின்
தொலைக்காட்சிக் கவனம் அறிந்தவனாகவே
அடுக்களை நுழைவேன் திருட்டுப் பூனையென
வெகு புதிதாய்க் கற்றிருக்கும்
சமையல் கவனத்தில் ஆழ்ந்தவளை
பின்னாலணைக்கப் பதறும் அடுப்பின் நீலச்சுவாலை
செல்லமாய்ச் சலித்து சமையலின் வேகங்குறைத்து
திட்டுவதாய்க் கொஞ்சித் தீர்ப்பாய்; பின்
காய்வெட்டி முடிந்து இங்கிதமாய்
கதைபேசச் சென்றுவிட்ட அம்மாவினை
யாரழைத்து வருவதென குழம்பிச் சிரிப்போம் நாம்

- கோகுலன் (gokulankannan@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.