Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை
மருத்துவர் அய்யா அவர்களே!: நச்சிம் இக்மத்
தமிழாக்கம்: புதுவை ஞானம்

Terror மருத்துவர் அய்யா அவர்களே! எனது
இருதயத்தில் ஒரு பாதி இங்கே
மறுபாதி சீனாவில் - மஞ்சள்நதி நோக்கி
முன் நகரும் படைகளுடன்..

ஒவ்வொரு நாள் காலையிலும்
மருத்துவர் அய்யா அவர்களே !
துளைக்கப்படுகிறது
எந்தன் இதயம்
கிரீஸ் நாட்டில்.

ஒவ்வொரு நாள் இரவிலும்
மருத்துவர் அய்யா அவர்களே
கைதிகள் அயர்ந்து உறங்கும் போதும்
மருத்துவமனை வெறிச்சோடிய போதும்
இஸ்தான்புல் நகரில் உள்ள
இற்றுப்போன பழைய வீட்டில்
நின்றுபோய் விடுகிறது
எந்தன் இதயம்.

பத்தாண்டுகள் கழித்து
எந்தன் ஏழை மக்களுக்கென
நான் வழங்க இருக்கும்
ஆப்பிள் பழம்
எந்தன் கைகளில் இருக்கிறது.
சிவந்த அந்த ஆப்பிள் பழம்
எந்தன் இதயம்தான்
மருத்துவர் அய்யா அவர்களே.

அதனால் தான்
மருத்துவர் அய்யா அவர்களே! எந்தன்
இதயம் வலி கொண்டு துடிக்கிறது.

நிகோடின் நஞ்சினால் அல்ல
சிறைவாசத்தினால் அல்ல
இரத்தநாள அடைப்பினால் அல்ல.

இரவு நேரங்களில் பார்க்கிறேன் நான்
சிறைக் கம்பிகளூடே
நெஞ்சு வலியையும் மீறித்
துடிக்கிறது எந்தன் இதயம்
தொலைதூர விண்மீன்களோடு.
__________________________

துருக்கிய மூலம் : நசீம் ஹிக்மத்.
ஆங்கிலத்தில்: Randy Blasing-Mutlukonak ANGINA PECTORIS.

- புதுவை ஞானம் (j.p.pandit@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.