Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

மனிதர் அனேகர்...
சோழ. நாகராஜன்


Human life பகலும் இரவுமாயும்
ஓட்டமும் உறக்கமுமாயும்
உணவே
பிரதானமெனக்கொண்டு
உருளுகிறது
வாழ்க்கை.

பலரும்
பலவிதமாக
வாழ்ந்து பார்க்கவே
யத்தனிக்கிறார்கள்.
இருந்தும் -
வாழ்க்கையென்னவோ
அதன் போக்கிலேயே
அடியெடுத்துவைத்து
அரற்றுகிறது.

சமூகமாக
வாழ்கிற விலங்காம்
மனிதன்.
சமூகத்துக்காக
வாழ்வதாகவும்
சிலர்
சிலாகிக்கிறார்கள்.

இருந்தும்
என்ன செய்ய?

விதம்விதமான
மனங்களைச்
சுமந்துகொண்டும்
மனங்கள் முழுவதிலும்
ரணங்களைச்
சுமந்துகொண்டும்
வாழத்தான் செய்கிறார்கள்
மனிதர்
அனேகர் இங்கே -

இதயமற்றவர்களிடம்
சதா
இரக்கத்தை
வேண்டினபடி...
எதிரிகள் எவர் என்று
தெளியவும்
தெரியாதபடி...

- சோழ. நாகராஜன் (cholanagas@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.