Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

மழைக்கொலை
சந்தர் சுப்ரமணியன்


dryland நடு நிசி வேளை,
கொக்கரிக்கும் தவளைகள்;

ஏதோ குடும்பத்தகராறு!

பெற்ற மகன் தற்கொலையால்,
ஒரு கிழட்டுத்தவளை
தலை குனிந்து நிற்கிறது;

சுற்றிக் குரல் கொடுத்து,
அக்கிழட்டு தவளையின் முகத்தில்
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
காறி உமிழும் தவளைகள்!

"மழை வருமென்றதால்
ஒரு சிறுமிக்கு
என் தவளை மகனை
மணம் முடித்தது
மடத்தனம் தான்"-
மனசுக்குள் அழும் கிழட்டுத் தவளை!

தூரத்தில், கிராமத்துப்பக்கம்,
அந்தச் சிறுமியின் வீட்டில்,
சாங்கியங்கள் முடித்து,
ஒன்றும் அறியாது
படுத்துறங்கும் சிறுமி!
சுற்றிலும்
தடபுடலாய் விருந்துண்ணும்
ஊர் மக்கள்!

- சந்தர் சுப்ரமணியன் (chandarsubramanian@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.