Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

கொடு
புகாரி

கொடு
எல்லாம் கொடு

பொன் பொருள் பணம்
என்பவை மட்டுமல்ல

அன்பு கருணை மன்னிப்பு
என்பவையும் மட்டுமல்ல

உன்னிடம்
உள்ள எல்லாவற்றையும்
அப்படி அப்படியே
கொடு

யாருக்குக்
கொடுக்கப்போகிறாய்?

எங்கிருந்து பெற்றாயோ
அங்கேயேதான்
நீ கொடுக்கப்போகிறாய்

உன்னுடையதென்று
எதுவுமே இல்லை

எவருக்கும்
எவருடையதென்று
எதுவுமே இல்லை
தயக்கம் வேண்டாம்
கொடு

கோடுகள் வேண்டாம்
கொடு

கொள்கைகள் வேண்டாம்
கொடு

ஒன்றையும்
இழந்துவிடமாட்டாய்
கொடு

கொடுப்பதால் பெறுகிறாய்
நீ கெடவில்லை
கொடு

உன்னைப்போலவே
எல்லோரும் கொடுக்கக் கொடுக்க
எல்லோரும் பெறுகிறார்கள்
நீயும்தான் பெறுகிறாய்
கொடு

கொடுத்துக்கொண்டே
இரு

எதுவும் உனதில்லை
கொடு

எதுவும் நிரந்தரமில்லை
கொடு

எதுவும் தவறில்லை
கொடு

உனக்குக்
கொடுக்கப்பட்டதை மட்டுமே
எவருக்கும் உன்னால்
கொடுக்க முடியும்

பெற்றதையெல்லாம் நீ
கொடுக்கக் கொடுக்க
அடடா...
அந்தச் சொர்க்கத்தை
அப்படியே உன் கண்ணுக்குள்
சுகமாக ஓடவிட்டுப் பார்
அதுபோதும்.....

நீ
கொடுப்பாய்

- புகாரி (buhari@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.