Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

பனிக்கரடி முழுக்கு
புகாரி

அஞ்சு...

டொராண்டோ, கனடா
ஜனவரி 1, 2008 செய்வாய்
உயிரை உறையவைக்கும் கடுங்குளிர்

நாலு....

ஒண்டாரியோ ஏரி
பனிக்கட்டிகள் மிதக்கும் சில்ல்ல்லீர் நீர்

மூணு....

ஆவிபறக்கும் சுடுநீர்ப் பூத்தூவலில்
குளித்துவிட்டு வெளிவந்தாலே
போர்வை தேடும் நாட்கள்

ரெண்டு...

கையில் சுடச்சுட சூப்பும்
உடலைச் சுற்றிய துவாலை ஆடையுமாய்
ஏரியின் கரைகளில் பலநூறு
நீச்சல் வீரர்கள்

ஒண்ணு...

பத்துவயது முதல் பாதி கிழம்வரை
ஆணும் பெண்ணுமாய்
இதோ இதோ என்று துடித்துக்கொண்டு

ஓடு....குதி...

துவாலையைத் தூர எறிகிறார்கள்
சரசரவென்று ஏரிக்குள் விழுகிறார்கள்
உயிர் துடியாய்த் துடிக்கிறது
வீல் வீல் என்ற அலறல்களோடு
முங்கு முங்கு என்ற கூச்சல்களோடு...

சிலர் முங்க சிலர் பின்வாங்க
அம்மாடியோவ்...

கரையில்
பல்லாயிரம் டாலர்கள்
வசூல்

உலகில்
சுகாதார நீருக்கு ஏங்கும்
ஏழை நாடுகளுக்கு
இந்த நன்கொடை...

நீர் நன்கொடை

இவ்வாண்டின் பெரும்பகுதி
சூடானின் நீர்ச் சுகாதாரத்திற்கு...

வாங்க வாங்க கனடாவுக்கு
நாமும் முங்குவோம்...
இது பனிக்கரடி முழுக்கு

- புகாரி (buhari@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.