Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

நாம் பிரிகிறோம்
பாஷா

Sad love நாம் பிரிகிறோம்.
நின்று, நடந்து
நெகிழ்ந்த நிமிடங்களை விட்டு
நெடும் தூரமாய்
நாம் பிரிகிறோம்.

கல்லறை அமைதியில்
கண்ணீர் கட்டும்
கணப் பொழுதுகளில்
நெஞ்சு பிளக்கும் வேதனையில்
நம் சவங்களை புதைத்து
நாம் பிரிகிறோம்.

தங்கைகளுக்கு அக்காவென்றோ
குடும்பபாரம் சுமக்கப்போகும்
தந்தையிழந்த தனயனென்றோ
அடுக்கி வைத்து காரணங்களால்
இடைவெளி நிரப்பி
நாம் பிரிகிறோம்.

பிறிதொரு நாள்.
நினைவுகளை நெஞ்சில் புதைத்து
நெருப்பில் நீ புகையாய் விண்ணுக்கும்,
கடைசி மூச்சில்
கண்களில் உன் முகம் தேக்கி
நான் புதையுண்டு மண்ணுக்கும்,
நாம் பிரிகிறோம்.

- பாஷா (sikkandarbasha@rediffmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.