கட்டுரை
மிருகம் பாஷா
நம் படுக்கையறையில்
சயனித்திருக்கும்
அந்த மிருகம்
ஒரு பின்னிரவில்
விழித்து என்
விரல்பிடித்து இழுக்கும்
ஆனால்
அதற்கான உணவை நீ
உன் குளிர் போர்வையில்
எப்போதும் ஒளித்து வைத்திருக்கிறாய்
பசியில் உக்கிரமான மிருகம்
என் தலை பிளந்து
மூளை பிய்த்தெரியும் நொடிகளில்
நீ உறக்கம் கலைந்து
வாரக்கணக்கில் பசித்தவனுக்கு
அரிசிமணி இடும் அவலத்தையே
எப்போதும் புரிகிறாய்!
உங்கள் விளையாட்டில்
என் ஆதாரங்களை
காப்பாற்ற கதியற்றவனாகிறேன்!
மிருகத்தை படுக்கையிலிட்டதார்?
அதன் உணவை ஒளிக்கும்
உன் விளையாட்டின் நோக்கம் என்ன?
வலி உயிர் குடிக்கும் வேளையிலும்
அதன் உணவை வேறிடம் தேடாமல்
உன்னிடம் இரந்து நிற்கும்
என் இயலாமையின் நீட்சி எதுவரை?
கேள்விகளின் தாக்கத்தில்
களைத்து கண்ணயர்கிறேன்
நித்தம் இப்படித்தான்
உறங்குகிறேன்!
- பாஷா (sikkandarbasha@rediffmail.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|