Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

புகைப்படத்திலேயே      வாழ்ந்திருக்கலாம்
பாலகிருஷ்ணன்

அழுந்தப் படிய வாரிய தலை
கோட்டு மீசை
பெரிய காலர் வைத்த சட்டை
பெருவிரல் மறைக்கும் பெல்பாட்டம் ஃபேண்ட்
என பார்ப்பதற்கு
கதாநாயகனைப் போல் தெரிந்தார்
அந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் என் தாத்தா
ஏதோ ஒரு பொங்கலில்
ஏதோ ஒரு ஜல்லிக்கட்டில்
ஏதோ ஒரு காளையை அடக்கிய
பெருமிதம் கண்களில் தெறிக்க
வெற்றிக் கோப்பையோடு
இன்னொரு புகைப்படத்தில் என் தாத்தா
பக்கத்தில் புதுமனைவி இருக்கும்
சந்தோசம்
முகத்தில் ததும்ப பாட்டியோடு
திருமணக் கோலத்தில்
ஒரு புகைப்படத்தில் தாத்தா
ஒரு குழந்தை பிறந்த அடையாளம் குறிக்கும்
வகையில்
குடும்பத்தோடு
மற்றொரு புகைப்படத்தில் தாத்தா
என்
அப்பாவின் திருமண ஆல்பத்தில்
கடமை முடித்த திருப்தியில்
தாத்தா
இதை பார்க்கும் பொழுதெல்லாம்
தோன்றுகிறது
தாத்தா
திண்ணையில் வாழ்வதற்கு பதிலாய்
புகைப்படத்திலேயே வாழ்ந்திருக்கலாமோ! என்று

- பாலகிருஷ்ணன் (balakrishnanalagarsamy@yahoo.com)



இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.