Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

நாட்டுப்புறப்பாட்டு
பாலசுப்ரமணியன்

தன்னே னன்னானே
தன, தன்னே னன்னானே
தன்னே னன்னானே
தன, தன்னே னன்னானே

சூரியரே சந்திரரே
சாட்சி சொல்லும் நட்சத்திரரே
சூரியரே சந்திரரே
சாட்சி சொல்லும் நட்சத்திரரே

உங்களுக்கு நன்றி சொல்ல
பொங்கப்பானை வைத்தோமைய்யா
தங்கமான தருணத்திலே
எங்க குறை தீருமய்யா

(தன்னே னன்னானே..)

தங்கப்பானை வைக்கவில்ல
தாமிரத்துக்கு வசதியில்ல
மண்பானை வைத்தோமைய்யா
மனமார படைத் தோமைய்யா

பால் வெள்ளை மனசுமைய்யா
வெல்லம் அதன் குணமுமைய்யா
நெல்லரிசி எம் உயிருமைய்யா
கலந்துமக்கு கொடுத் தோமைய்யா

(தன்னே னன்னானே..)

வயக்காட்டில வேல செஞ்சு
வளம் பாத்த பூமி அய்யா
வாழ்ந்துகெட்ட சனமுமைய்யா
வெள்ளாமை மறந்து எங்க புள்ள

வெளிநாடு போகுதைய்யா
வெய்யிலிலே காயுதைய்யா
வெத நெல்லும் உணவானா
வெவசாயம் எங்கே அய்யா?

(தன்னே னன்னானே..)

பொன்னியை மறந்தைய்யா
பாசுமதி கேட்குதைய்யா
பெற்றவர தொலச்சதைய்யா
மற்றவர் பின் அலையுதைய்யா

காசு பணம் கேட்கவில்ல
காரு பங்களா தேவயில்ல
காலத்தில் மழ பெய்ஞ்சா
கடன் கட்ட உதவுமைய்யா !

(தன்னே னன்னானே..)

- பாலசுப்ரமணியன் (BalaSubramanian@ZAMILSTEEL.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.