Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

வாங்க.. கல்வி.. வாங்க..
பாலசுப்ரமணியன்

கல்வியை கற்பிப்பவன் தெய்வம் அன்று
கல்வி லாபம் தரும் வியாபாரம் இன்று

Class room கல்வி ஒரு பணப்பயிர்; விலை அதிகம்
கரும்பையும், கஞ்சாவையும் விட

கல்வியின் கதவுகள் திறக்கும் உன்
கரங்களில் பணமிருந்தால்

கற்றையாய் காசு கொடுத்தால்
கதவுகள் மூடிய கல்லூரிக்குள் கூட
ஒற்றை சாளரம் வழியே
ஓசைபடாமல் நுழையலாம்

பள்ளிக்கு பெயர் மட்டும் நீ வை
துள்ளி வந்து தருவார் பொற்குவை
வெள்ளிப்பணம் வந்து வந்து குவியும்
கிள்ளி எடுத்தாலும் கோடி தேறும்

கற்பித்துக்கொண்டே கற்கலாம்
கற்பிப்பதும், கறப்பதும் எப்படி என

படித்தவன் ஒரு வேளை தேறாவிடினும்,
முடித்தபின் வேலை(யும்) கிட்டாவிடினும்
கற்பித்தவன் நான் இங்கு வீணாய்
கவலை ஏன் கொள்ள வேண்டும்?

நுகர்வோர் நீதிமன்றம் கூட..
நுழைய முடியாது என் வகுப்புக்குள்..

திருவள்ளுவர் இன்று இருந்தால்
திருக்குறளையும் பதமாக வறுத்து..
சிறிது உப்பும் மிளகும் சேர்த்து.
விருவிரு என்று விற்று காசாக்க
உரிமையை (அவரிடம்) வாங்கி
குறளையும் கொஞ்சம் மாற்றுவேன்

“கற்க கசடற கற்பவை கற்ற பின்
விற்க அதற்குத் தக” என!

- பாலசுப்ரமணியன் (BalaSubramanian@ZAMILSTEEL.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.