Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

சிகத்த இருட்டு
துறையூரான் அஸாறுடீன்

எந்தன் சதிரத்தில் நெய் உருக்கும் - இந்த
வேண்டாத இரவுகளை
விரும்பியும் விரும்பாமலும் வரவேற்கிறேன்...

மலர்கள்.. மணங்கள் மற்றும்
பழங்கள் எனப் பல ரசங்களோடும்
கத்தி கறண்டி கைவிரல்கள்
இன்னும் பலவாய் ஆயுதங்கள்
அழகழகாய் இருந்திட்டும் - என்னை
கடித்துச்சப்பி கறுமுறென்ற
கோர உணர்ச்சிகளின் துவம்சத்தால் - என்
சதிரத்தில் வட்டமாயும் நீட்சியாயும்
குறுக்கு மறுக்காய்ப் பல கீறல்கள்
பரந்த வலைப்பின்னலதுவாய்...

தேகத்தைத் தேடிவரும்
வேண்டாத இந்த இரவுகள் - இனி
சிகப்பாய் இருட்டும்...

- துறையூரான் அஸாறுடீன், இலங்கை (azar86@hotmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.