Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

சுமை
அஸிர்

man நான் எதையாவது சுமந்து கொண்டே திரிகிறேன்
அல்லது அல்லது எதையாவது
சுமக்க தேடிக்கொண்டெ திரிகிறேன்
எனது சுமைகள் அதன் நியமங்களை
என்னுடன் பகிர்வதேயில்லை
அல்லது அது பகிர்வதை நான் சட்டை செய்வதேயில்லை
ஒரு கடும் பனிக்காலக்கால
காற்றைப்போல நான் விரும்பா தென்றலை
எனக்காக நான் அழைக்கிறேன்
எனது இறுக்கி மூடப்பட்ட
அறைக்கதவின் இடுக்குகள் வழியே
வழிந்தோடும் தென்றலை
எனது போர்வையால் மூடி வைக்கிறேன்
அது எனது சிக்ரேட் புகைவழியே
தப்பி ஓடுகிறது
எனது மூடப்பட்ட போர்வையின் கனவுகள்
தென்றலை தேடித்திரிகின்றன
பெருமுச்சுகள் படர்ந்த அதன் நூலிழைகள்
அதன் வரம்பு கடந்து எனது கழுத்தை
கிழித்து எனது குருதியை நனைக்கிறது
போர்வைக்குள் புதைந்த எனது இரவை
நான் கவனமாய் சேகரிக்கிறேன்
கனவுகளை மீறி

-அஸிர் azir2312@gmail.com

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.