Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

குறள் வடிவில் ஒரு தமிழனின் குரல்
த.வெ.சு.அருள்

அழியுமே உயிர்களிடத்துக் காதல் - ஆங்கே
அழியாது தமிழ்மீது கொளல்.

உயிர் காக்க முனைவதுபோல் - தமிழ்
மொழி காக்க முயல்.

தமிழ் கற்க பற்றுயரும் - அப்
பற்றுயர தமிழ் வளரும்.

தாழ்நிலம் நோக்கிடும் நீராய் - தாழ்ந்து
கிடக்கும் தமிழ் பாராய்.

பொருள் பலசேர்க்கின் பயனிலை - பயனாம்
தமிழ்ச்சொல் சில சேர்க்கின்.

தன் னிலை உணர் வாகுமாம்
தண்டமிழ் நிலை உணர்வது.

வற்றுமே பாலை வரின் நீராறு
அவ்வாறு வற்றாதே செந்தமிழாறு.

கார்முகில் இருள மயிலாடும் - மன
மாடுமே தமிழிசை கூடிவர.

மழை வேண்டும்போல் மக்கட்கு - தமிழ்
வேண்டு மாம் தமிழர்க்கு.

நிலக்கண் காக்கும் உரம்போல் - தாய்த்
தமிழ் காக்க பயன்படு.

காக்கைக்கும் பொன்குஞ்சாம் தன்குஞ்சு போல்
நம்மோரை இகழ்வது துற.

பன்மொழி கற்பின் பயனென் கொல்
தாய்மொழி கல்லா விடின்.


- - த.வெ.சு. அருள் (tvsarul@rediffmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.