கவிதை
வயது: 52 வருஷம், 9 மாதம், 17 நாள்!
எஸ். அர்ஷியா
உருவாகித் தவழ்ந்தோடி
பிரவகித்து அடைபட்ட நதி,
பின்னர் விடுபட்டு
வழியெங்கும் நனைத்துச் சென்று,
கரைந்து தொலைத்தது
அடையாளத்தை!
வேப்பமரத்தின் உள்ளடர்த்தியில்
தனித்தக் கிளையின்
விரிவொன்றில் தங்கும்
செம்போந்தின் குரலில்,
தாளாத ஏக்கம்!
சில்லென்று வீசியக் காற்றில்,
சிலிர்த்துக் கொண்டு
தலையாட்டியக் கிளையிலிருந்து
உதிர்ந்த இலையொன்று,
அவள் முகத்தைப் போலவே இருந்தது.
இப்போதெல்லாம்...
எப்போதாவது தான் வருகிறது,
அவள் ஞாபகம்!
- எஸ். அர்ஷியா(arshiyaas@rediffmail.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|