Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

வழிபாடு
அறிவுநிதி

Love failure உதிர்ந்தும்
உலர்ந்தும் சரசரக்கும் இலையென
நீ
இல்லாத போதும்
இருப்பதாகவே காட்டிக்கொள்கிறேன்

வீட்டின் உட்பகுதியில்
சூனியத்தின் தழுவல்கள் நிறைந்து
ஆழ்ந்த நிசப்தத்தில்
வன்முறை அழைக்கிறது

இழுத்துவிடும் பெருமூச்சு
மீட்டுகின்றன உனக்கான அழைப்பொலியை

உன் இருக்கையில் அமர்ந்துகொள்கிறேன்
பகிர்வுகள் பற்றி மௌனம்
பேசிக்கொண்டே இருக்கிறது

குழந்தையின் அழுகையைப்போல
சாத்தியிருக்கும் சன்னலுக்கு வெளியே
மழையும் வந்து செல்கின்றன

என்னில் நிறைந்து
கண்ணில் வடிகிறாய்

ரகசியமாய் பூத்துக்கிடக்கிறேன்
ஒரு பூவாக

வாசல் திறந்தே கிடக்கிறது
பெரும் வரவாய் வந்துவிட்டுப் போ.

- அறிவுநிதி (arivuniti@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.