Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கவிதை

குலத்தொழில்
அனுஜன்யா


Child beggar தள்ளாடித் துவளும்
சிறுவனின் கால்கள்
பதினாறு தெருக்களைச்
சுற்றியிருக்க வேண்டும்
கையை உயர்த்திப்
பிச்சை கேட்கும் தாயின்
இடுப்பில் சாய்ந்து,
பிச்சையிடும், மறுக்கும்,
துரத்தும், இச்சிக்கும்,
காறியுமிழும் நூறு
முகங்களைக் காலையிலிருந்து
கண்ட களைப்பு அவனிடத்தில்;
எனக்குப் பதட்டமாக இருக்கிறது
சிறுவயதில் அல்லலுறும் இவன்
பின்னாட்களில் திருடலாம்
கொள்ளையடிக்கலாம்
பயங்கரவாதியாகி
நகரை அச்சுறுத்தலாம்.
அதெல்லாம் பரவாயில்லை.
பிச்சைக்காரனாகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது

- அனுஜன்யா(anujanya@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.