 |
கவிதை
அரி முகங்கள்
அனுஜன்யா
போதையில் வீசியெறியப்பட்டு
மேசையில் சிதறியிருந்த
பல்வேறு அறிமுகங்கள்
நாலைந்து வரிகளின் பின்
அடுக்கப்பட்ட பொய்கள்
ஒவ்வொரு அட்டைக்கும்
சொல்ல ஒரு கதை
சுய அட்டைகளும்
பலப்பல மேசைகளில்
வீசியெறியப்பட்டு
காறி உமிழப்படலாமென்று
நினைவில் நிறுத்தியது
முகத்திலடித்த குளுநீர்
காலை புறப்படுமுன்
சட்டைப்பையில்
மூன்று அட்டைகள்
இன்றைய வேடங்கள்
அநேகமாய்
நண்பன், விசுவாசி
மற்றும் கனவான்
என்று இருக்கலாம்
- அனுஜன்யா([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|