கவிதை
பாறைகளில் வேர்கள்? அனுபமா உதிவ்
குண்டுகளைப் போல
உலகமும் உருண்டை
உயிர்கள் மூச்சுவிடும்
இலவசக் காற்றால்...
பாறைகளில்
நீர் தேடும் வேர் முண்டுகள்
நகர்ந்து போகும்
மண்புழுக்கள் சில...
அவற்றிற்குத் தெரிந்தவை
கரிசல் மண்ணும்
கரிசன ஈரமும்
மிச்சம் இருக்கின்ற உயிருக்குத்
தேடல்தான் என்ன?
மரணப் படுக்கையில்
பொய்த்துவிடும் அறிவு
சிரிக்கக் கற்றுக் கொண்டன முகங்கள்
விழுகின்ற குண்டுகளில்
பூக்களும் நிறம் மாறி விட்டன
வெற்றியோ தோல்வியோ
காண்பதற்கு
உயிரோடு இருக்க வேண்டுமே!
வாழ்க்கையை இழந்துவிட்டாலும்
வரலாறு இருக்கும்
குண்டுகளைப் பூக்களாக்கும்
வித்தை கற்க வேண்டும் முதலில்!
- அனுபமா உதிவ்[sethu2306@yahoo.co.uk]
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|