Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

பூனைகள்
அன்பாதவன்

Cats இன்னமும் பூர்த்தியாகாத வீட்டில்
புதுமனைப் புகுவிழா ஏதுமின்றி
குடித்தனம் நடத்துகிறதொரு
பூனைக் குடும்பம்

மனைவியுடன் சம்பாஷிக்க வரும்
ரகஸ்ய நண்பனைப் போல
இரவின் அமைதியில் ஊடுருவி
பாத்திரமுருட்டும் பூனையொன்று

பூச்செடிக்கு அருகே
முகர்ந்து பார்க்கிறது பூனை
வாசமில்லா அழகியப் பூவை

கற்றுக் கொடுத்தது யாராயிருக்கும்
படியேறி வருகின்றன பூனைக் குட்டிகள்
பார்த்தவுடன் மிரண்டோடிப்
பதுங்குகின்றன
குரலில் வெளிப்படுவது
மிரட்சியா... மிரட்டலா..

குட்டிகளோடு சேர்த்து
ஏழோ எட்டோ இருக்கின்றன
பூனைகள்
ஆனாலும் இருக்கிறது
எலித்தொல்லை

மிக அருகருகே வாழ்கிறோம்
பூனைகளும் நானும்
உறவுகளைப் போலவே
மன நெருக்கமின்றி.

- அன்பாதவன், மும்பை (jpashivammumbai@rediffmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.