Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை
கன்னியவளுக்கு ஒரு கதை
அல்பேட் பவுலஸ்

Lady கன்னியவளின் கன்னத்திலென்
கன்னம் வைத்துக் காதில்
கவிதை சொன்னேன்

கள்வர் வருவார் கவனமடி
காவல் காக்கப் போகும் வேளை
கரும்பாதச் சத்தங்கள் உன்
காதுகளுக்குள் இனிமையான
கானங்களாக நடனமிடும்
கண்டுகொள்ளாதே...

காதலால் வசப்பட்ட என்னைக்
கள்வர்கள் திருடிய போதும்
எந்தன்
கனத்த இதயத்தின் அலறல்கள்
கண்மணி உன் செவிகளில்
கதைபேசும்…அப்போது
கண்டுகொள் என்னை மட்டும்..

கனவுகளாய் இருந்த காலங்களில்
கள்ளச் சிரிப்புடன் உலாவும்
அந்தக் காக்கைக் கூட்டம்
உன்னையும்
கட்டாயமாகக் களவாடிக்கொள்ளும்..

கண்மணியே அதுவரை காத்திராது
களமிறங்கிக்கொள்… உன்
காதலிதயத்தில் எந்தன்
தாகத்தையும் கவனமாகத்
தைத்துவவைத்துக்கொள்…
களமிறங்கி என்னைக் களவாடிய
அந்தக் கள்வரின் கைகளைத்
துண்டாக்கிக்கொள்...

- ஆல்பர்ட் (albertpaulus@hotmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.