கட்டுரை
நிமிர்ந்து நடக்கும் நதி த.அகிலன்
ஒரு
புன்னகை
கடந்துபோகிறது
நிமிர்ந்து நடக்கும்
நதியைப்போல...
சட்டென்று
பின்தொடர்ந்து
முழிக்கிறது மனசு
வாகனங்களின்
தெருவில் மாட்டிக்கொண்ட
ஒரு
குழந்தையைப்போல,
யாரும்
கண்டுகொள்ளாத
குழந்தையின் கண்ணீர்
எனக்குள் நுழையும்
ஒரு
நதியின் கவிதையென
வாகனங்களின்
இரைச்சலையும் மீறி
என்
காதுகளை அடைகிறது.
புல்லாங்குழலின்
சங்கீதம்
- த.அகிலன் (agiilan@yahoo.co.uk)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|