Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteraturePoem
கட்டுரை

எழுதுகோல்!
அகரம் அமுதா

மையிட்டக் கோலதன்
மெய்ப்பிடித்து –ன்
செய்யிட்ட ஏறண்ண
சேறடித்து...

பொய்யற்ற மெய்கொண்ட
பொருள்விதைத்து –நாம்
உய்வுற்று வாழவோர்
உரைவகுத்து...

உடுக்கைகொள் பையெனும்
உறைகிடக்கும் -நற்
தடக்கைகொள் எழுதுகோல்
தகைவிரிப்பேன்!

ஆலிலை முனையொக்கும்
கோல்முனைகாண் -அது
சாலைக்கொண்டளவொணா
சமுத்திரம்தான்!

தோள்வலி இலானையும்
திறனாக்கிடும் -எழுத்
தாளனாய்ப் புலவனாய்
ஆளாக்கிடும்!

மாளிகை மண்ணாகும்
வகைகற்றகோல் -சிறு
தூளியைத் தூணாக்கும்
தொகைகற்றகோல்!

நாவென்று நாம்வாழ
நானிலத்தே ஓர்
தாவின்றிக் கற்பிக்கும்
தனிப்பெருங்கோல்!

மூப்பென்ற ஒன்றுடலை
மோகித்தப்பின் -கைக்
காப்பென்று ஆகும்மரக்
கம்பென்றகோல்!
அவ்வூண்று கோல்தாங்கி
அடங்கிடாமுன் -நம்
கையூண்றும் ஒப்பிலாக்
கோல்எழுதுகோல்!

எண்முனைந் தோதியதை
ஏற்றுஒழுகும் -பெண்
கண்முனை யொத்தகோல்
தாளிலழுகும்!

மாடிமனைத் துயின்றிடும்
மாந்தருக்கும் -தெருக்
கோடிமுனைத் துன்புறும்
கூட்டத்திற்கும்...

ஏட்டில்முனை வைத்தழுகும்
எழுதுகோலே –அவர்
பாடுயற பகுத்தறிவின்
திறவுகோலே!

- அகரம் அமுதா (agramamutha@yahoo.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.